Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1426 கி.பி. 2005


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின்
ஈத் அல்-பித்ர் வாழ்த்துச் செய்தி


ஒரு மாத கால பயிற்சிப் பாசறையை முடித்துக் கொண்ட முஸ்லிம் சமூகம் உள்ளங்களில் மகிழ்ச்சி ததும்ப ஹிஜ்ரி 1426 நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்ற இவ்வேளை சகல முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் என் சார்பாகவும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பாகவும் இதயபூர்வ ஈத் அல்-பித்ர் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் புளகாங்கிதம் அடைகின்றேன்.

இவ்வாண்டின் ஆரம்பத்திலே உலகளாவிய முஸ்லிம் உம்மத் தியாகத் திருநாள் ஹஜ் பெருநாளைக் கொண்டாடிய நேரத்தில் இருந்ததைக் காட்டிலும் அதிகமான மக்கள் நிலநடுக்கங்கள், ஆட்கொல்லி நோய்களால் இதயம் புண்ணாகி, விம்மி மெனளக் கண்ணீர் வடித்து நிற்கும் நிலையிலே மற்றுமொரு ஈகைத் திருநான் இன்று மலர்ந்துள்ளது.

முன்னெப்போதைக்காட்டிலும் இந்நாட்களில் உலகம் பேரலை, நிலநடுக்கம், பெருமழை, புயல், தொற்று நோய்கள் போன்ற வடிவங்களில் சோதனைக்கு முகங்கொடுத்து வருவதோடு பாதிக்கப்பட்டுத் துன்புறும் ஒருவர் துயர் துடைக்க இன்னுமொருவர் உதவிக் கரம் நீட்ட முடியாத நிலை உருவாகுமோ என்றெண்ணும் அளவிற்கு நாளுக்கு நாள், நாட்டுக்கு நாடு அல்லாஹ்வின் சோதனைக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது.

உலக மக்கள் குறிப்பாக இஸ்லாமிய உம்மத் மேலும், மேலும் பொறுமையை அனுஷ்டிக்க வேண்டிய காலம் இதுவாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் தனது அருள் மறையிலே இவ்வாறு குறிப்பிடுகிறான்:

“பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக்கொண்டும், செல்வங்கள், உயிர்கள், கனிக(ளின் விளைச்சல்க)ள் ஆகியவற்றில் குறைவைக் கொண்டும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். மேலும் (நபியே! இவற்றைப்) பொறுத்துக் கொள்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!” (2:155)

அவ்வாறான மக்கள் துயரங்களைச் சந்திக்கையில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்றும் அல்லாஹ் சொல்கிறான்:

“அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுக்கு ஏதேனும் ஒரு துன்பம் பீடித்தால், “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம்; நிச்சயமாக நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கிறோம்” என்றும் கூறுவார்கள்.” (2:156)

எனவே பொறுமை காத்து, அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி, இயன்ற வரை துயருற்றோருக்கு இந்நாளிலே உதவுவோமாக!

“அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்”


அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2005.10.27

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page