Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

அறிஞர் சித்தி லெப்பையை வாட்டிய துக்கம்


இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சித் தந்தையாக பார்க்கப்படுபவர் அறிஞர் எம்.ஸி. சித்தி லெப்பை. கல்விமான்களாலும் ஏனையோராலும் அடிக்கடி நினைவுகூரப்படும், பேசப்படும் ஒருவர் அவர். சமயக் கல்வியும், பொதுக் கல்வியும் கற்றவர். சட்டத்தரணியான அவர் ஓர் எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், நூலாசிரியர். கல்விமானாக விளங்கிய அதே வேளை ஒரு சமூக சேவையாளராகவும் திகழ்ந்தார்.

அறிஞர் சித்தி லெப்பையின் அரபு மற்றும் ஆத்மீக ஆசானாகவும் சமய வழிகாட்டியாகவும் இருந்தவர் அறிஞரும் கவிஞருமான கசாவத்தை ஆலிம் அவர்கள். சித்தி லெப்பையின் முற்போக்கு சிந்தனைக்கும் பணிகளுக்கும் பின்னணியில் தூண்டுதலாக இருந்தவர் கசாவத்தை ஆலிம் புலவர்.

தனது ஆசிரியப் பெருந்தகையான கசாவத்தை ஆலிம் மீது அலாதி அன்பும் மிகுந்த மரியாதையும் கொண்டிருந்தார் சித்தி லெப்பை. 1893இல் கசாவத்தை ஆலிம் அவர்கள் இறையடி எய்தியபோது சித்தி லெப்பை மிகுந்த கவலையுற்றிருக்கிறார். தனது துக்கத்தை எழுத்தில் வடித்தார். இது பற்றிய விபரங்களைத் தருகிறது சகோதரர் ஏ.எம். நஜிமுதீன் அவர்களின் 'கசாவத்தை ஆலிம் புலவர்' என்ற நூல். இந்தத் தகவலைத் தரும் பக்கம் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அறிஞர் சித்தி லெப்பையை அடிக்கடி நினைக்கும் நாம் அவரின் வழிகாட்டியாக திகழ்ந்த கசாவத்தை ஆலிம் அவர்களையும் நினைத்தால் என்ன?

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1440.05.28
2019.02.04


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page