Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

ஆலிம்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பது
காலத்தின் தேவை


ஷைக் அல்-ரஹ்மானிய்யஹ் ஜிப்ரி ஹழ்ரத்

இன்று (2019.08.07) காலை நேரம் 06:58. என் கையடக்கத் தொலைபேசி அலறுகிறது. நான் பேருந்தில் பயணத்தில் இருக்கிறேன். அழைப்பவர் எனது மரியாதைக்குரிய உஸ்தாத் ஷைக் அல்-ரஹ்மானிய்யஹ் ஜிப்ரி ஹழ்ரத் அவர்கள். அன்னாரின் இலக்கம் என் தொலைபேசியில் விழுந்தால் அடித்து ஓயும்வரை விட்டுவிடுவேன். அதன் பின்னர் அடியேன் அன்னாருக்கு அழைப்பை ஏற்படுத்துவேன். இது என் வழமை. இன்றும் அப்படியே செய்தேன்.

பரஸ்பரம் குசலம் விசாரித்த பின் ஹழ்ரத் அவர்கள் தொடர்ந்தார்கள். மவ்லவிகள் எல்லோரும் கண்டிப்பாக ஆங்கிலம் கற்க வேண்டும். அம்மொழியில் அவர்கள் புலமை பெற வேண்டும். மத்ரஸாக்கள் தமது மாணவர்களுக்கு ஆங்கில பாஷையை திறம்பட போதிக்க வேண்டும். இது இன்றைய காலத்தின் அவசிய தேவை. இந்த விடயத்தை வலியுறுத்தி ஆலிம்கள், மத்ரஸாக்களின் நிருவாகிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் விளங்கிக்கொள்ளும் வண்ணம் ஒரு கட்டுரை அவசரமாக எழுதப்பட வேண்டும். இதனைச் செய்வதற்கு தகுதியானவர், பொருத்தமானவர் நீங்கள்தான். ஆகவே தாமதிக்காமல் இந்த வேலையைச் செய்யுங்கள் என உரிமையுடன் வேண்டிக்கொண்டார்கள். ஹழ்ரத் அவர்கள் இந்த விடயத்தைப் பற்றி பேசுகிறபோது தனது சொந்த அனுபவங்கள், சமகால சுதேச மற்றும் விதேச நிலவரங்கள், இலங்கை முஸ்லிம்களின் நிகழ்கால நிலமை என பரந்து பட்ட பார்வையில் உரையாடினார்கள். அன்னாரின் கருத்துக்களை அமைதியாக செவிமடுத்துவிட்டு உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் இன் ஷா அல்லாஹ் என்று சொன்னேன்.

முதல் கட்டமாக ஷைக் அல்-ரஹ்மானிய்யஹ் அவர்களின் மேற்படி சிந்தனையை ஆலிம்களுக்கும், அரபுக் கல்லூரிகளுக்கும் சிந்தனைக்கு விருந்தாக விடுகிறேன்.

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1440.12.05
2019.08.07


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page